தேடல்

அரிசி கடத்தல் கும்பலுக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுப்பு

துச்சேரி:புதுச்சேரியில் இருந்து ஒடிசாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கும்பலுக்கு, ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது.புதுச்சேரியிலிருந்து கடந்த வாரம்ரயிலில்ஒடிசாவுக்கு கடத்தப்பட இருந்த6 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் முகமது மன்சூர் தலைமையில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி., ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுச்÷Œரி மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கிய ரேஷன் அரிசியைஒடிசாவில் கூடுதல் விலைக்கு விற்க கடத்த முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒடிசாவை சேர்ந்த தீபக்குமார், 19, லக்கிகுமார், 20, லிட்டில்மாலிக், 21, செக்குந்தர்ராய், 32, திலிப்ரதான், 25, அணில்குமார், 19 உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களைஜாமினில் எடுக்க, புதுச்சேரி கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தாமோதர், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ள உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஒடிசா கும்பலுக்கு ரேஷன் அரிசி சப்ளை செய்த புதுச்சேரி புரோக்கர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.