ஆஸ்பத்திரி தினவிழா

விருதுநகர் :விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆஸ்பத்திரி தினவிழா, மாவட்ட சுகாதாரா துறை இணை இயக்குனர் அஜி கண்ணம்மா தலைமையில் நடந்தது. ஆண்டறிக்கையை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சாந்தா மேரி வாசித்தார். டாக்டர் சாமியப்பன் முன்னிலை வகித்தார். ஆஸ்பத்திரியின் வளர்ச்சி மற்றும் நோயாளிகளிடம் ,ஆஸ்பத்திரி பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து, கலந்தாலோசிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.