தேடல்

இந்தோ - திபெத் படைவீரர் மாயம்

சிவகங்கை:சண்டிகர் மாநிலம், நெட்குரோ புகாரா மாவட்டத்தை சேர்ந்தவர் கனகபிரசாத் குப்தா. இவரது மகன் சந்தர்குமார் குப்தா, 24. சிவகங்கை, இலுப்பக்குடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புபடையில் வீரராக உள்ளார். கடந்த 21ம் தேதியில் இருந்து இவரை காணவில்லை. வெளியே சென்றது குறித்து, அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அசிஸ்டண்ட் கமாண்டண்ட் தர்மேந்திர தாகூர், பூவந்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். சந்தர்குமார் குப்தா, வீட்டிற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.