இத்தாலி கப்பல் ஊழியர்களின் காவல் நீட்டிப்பு

திருவனந்தபுரம் : இந்திய மீனவர்கள் 2 பேரை கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இத்தாலிய கப்பல் ஊழியர்களின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ. 25 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்திய பின், கப்பலை இந்திய கடற்எல்லையில் இருந்து செல்லலாம், அதுவரை, இங்குதான் இருக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.