என்கவுன்டர் ஏன் : கமிஷனர் விளக்கம்

சென்னை : பொதுமக்களை பாதுகாக்கவும் மற்றும் வங்கிக்கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காகவே, வங்கிக்கொள்ளையர்களை போலீசார் என்கவுன்டர் செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார். சென்னையில், பத்திரிகையாளர்களை சந்தித்த கமிஷனர் திரிபாதி கூறியதாவது, வங்கிக்கொள்ளையர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை, என்கவுன்டராக சென்னை போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது. இதுகுறித்து, குற்றவியல் கோர்ட்டிற்கு எப்.ஐ.ஆர் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையை குற்றவியல் கோர்ட் மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.