தேடல்

எப்போது பெய்யும் தென்மேற்கு பருவமழை

மதுரை: கடந்தாண்டு பெரியாறு அணைப் பகுதியில் ஜூன் 1ல் 74.2 மி.மீ., 2ல் 111.2 மி.மீ.,3ல் 30, 4ல் 32, 5ல் 53, 6ல் 11 மி.மீ., என, முதல் வாரத்தில் 330 மி.மீ., மழை பெய்தது. இதே தேதிகளில் தேக்கடியில் 25 மி.மீ., 70.8, 23.2, 25.6, 15, 5 மி.மீ., மழை பெய்தது.இரண்டாவது வாரம் பெரியாறு அணைப் பகுதியில் மிதமாகவும், மூன்றாவது வாரம் 150 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணையில் நீர்மட்டம் 120 அடியைத் தாண்டியது. ஜூன் 21, 22 தேதிகளில் 125.9 அடியாக இருந்தது. இம்மாதம் ஜூன் துவங்கியது முதலே, மழை ஏமாற்றத்தை தந்தது. ஜூன் 6ல் பெரியாறு அணைப் பகுதியில் 7.7 மீ., மழையும், அதன்பின் சொற்ப மழையுமாக, ஜூன் 22வரை, மொத்தமே 176 மி.மீ., மழை தான் பெய்துள்ளது. பெரியாறு அணை நீர்மட்டம் 111.7 அடி, வைகை அணை 44.69 அடி. அணைக்கு நீர் வரத்து எதுவும் இல்லை.சிலநேரங்களில் தாமதமாக மழை துவங்கும் போது அக்., வரை நீடிக்கும். தற்போது அப்படி தொடருமா எனத் தெரியவில்லை. கேரளாவில் தொடர் மழை பெய்யும் போது தான், பெரியாறு அணை மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து கிடைக்கும். பாசனத்திற்கும் திறந்துவிடப்படும். தற்போது மழை எதிர்பார்த்த அளவு இல்லாததால், ஜூன் 25ல் கம்பம் பள்ளதாக்கு பகுதிகளுக்கு, தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.