தேடல்

எப்.டி.ஐ.: மம்தா பரிசீலிக்க மத்திய அமைச்சர் கோரிக்கை

புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அமல்படுத்துவதும் விஷயத்தில் மம்தா பரிசீல‌னை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க கடந்த 2011ம் ஆண்டு நம்பவர் மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கு கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி , மம்தாவிடம் சமாதானம் பேசியும் விடாபிடியாக எதிர்த்ததால் , மத்திய அரசு இம்முடிவை தற்காலிகமாக கைவிட்டது.
இந்நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர்ஆனந்த் ஷர்மா, டி.வி.சானலுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி அரசில் முக்கியமான கட்சி மம்தா கட்சி, எனவே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவில் மாற்றமில்லை. எனினும் முதல்வர் மம்தா எதிர்க்கும் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.