தேடல்

எருக்கன் மலையாற்றில் பாலம் இல்லை: கிராம மக்கள் பாதிப்பு

நத்தம்: முளையூர் ஊராட்சிக்குட்பட்ட சின்ன முளையூரில் செல்லும் எருக்கன் மலை ஆற்றில் பாலம் கட்டாததால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

நத்தம் ஒன்றியம் முளையூர் ஊராட்சியில் சின்னமுளையூரில் எருக்கன் மலை தொடர்ச்சி உள்ளது. இங்கு எருக்கன் மலை ஆறு செல்கிறது. மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் காட்டாற்று வெள்ளத்தால் இவ்வழியே பஸ் உட்பட வாகனங்கள் செல்ல முடிவதில்லை.

மழைநீர் வடிந்தபிறகே பல மணி நேரம் கழித்து செல்ல வேண்டியுள்ளது. எரம்மநாயக்கன்பட்டி,முளையூர்.சின்னமுளையூர், ராவுத்தம் பட்டி, நரசிம்மபுரம், எல்லைப்பாறை உட்பட இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அவசரகாலங்களில் மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் நத்தத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். இக்கிராம மக்கள் பயன்பெற பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.