ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடர்: இந்திய வீரர்கள் டிரா

மாஸ்கோ: ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடரின் எட்டாவது சுற்று போட்டிகளில் இந்திய வீரர் சசிகிரண், அபிஜீத் குப்தா டிரா செய்தனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. ஏ பிரிவு எட்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் சசிகிரண், ரஷ்யாவின் அலெக்சாண்டரை சந்தித்தார். இதில் 27வது நகர்த்தலின் போது, போட்டியை டிரா ஆனது.
மற்றொரு இந்திய வீரர் அபிஜீத் குப்தா, உக்ரைனின் ஆதம் இடையிலான போட்டியும் டிரா ஆனது. சேதுராமன், ஆஸ்திரியாவின் மார்கசிடம் தோல்வியடைந்தார்.
எட்டு சுற்று போட்டிகளின் முடிவில் இந்திய வீரர் சசிகிரண் 24வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து மற்ற இந்திய வீரர்கள் அபிஜீத் குப்தா 34, சேதுராமன் 49 வது இடத்தில் உள்ளனர். ஹரிகா துரோணவல்லி 73வது இடத்துக்கு முன்னேறினார்.