தேடல்

ஐஸ்வர்யாவின் அடுத்தபடம் குழந்தைகள் படம்...?

தான் இயக்கிய முதல்படமான 3 படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ‌கொலவெறி...கொலவெறி... என்ற ஒரே பாட்டுக்காக அந்தபடத்தை உச்சாணிக்கொம்பில் ஏத்திவிட்டு, கடைசியில் அந்தப்படம் சரியாக போகாததால் வில்லங்கமும், பிரச்னைகளும் தான் ஐஸ்வர்யாவுக்கு மிஞ்சியது. மேலும் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கூட பிரச்னை என்று புகைச்சல் கிளப்புகிறது கோடம்பாக்கம். இருந்தாலும் தன்னுடைய முதல்படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்றதால் உற்சாகத்தில் இருக்கம் ஐஸ்வர்யா, தனது அடுத்தபடத்திற்கான வேலையை துவங்கிவிட்டார். விரைவில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இப்படத்தில் சத்தியமாக தனுஷ் ஹீரோ இல்லை. குழந்தைகளுக்கான படத்தைதான் எடுக்கப் போகிறாராம் ஐஸ்வர்யா. இதற்காக ஏகப்பட்ட மழலை பட்டாளங்களை அழைத்து வரச்செய்து அவர்கள் தேவையான நடிப்பு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் இப்படத்தை அவரே தயாரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.