லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இன்று முதல் பதக்கம் கிடைத்தது. 10 மீ., துப்பாக்கி சுடுதல் ஏர் ரைபிள் பிரி போட்டியில் ககன் நரங் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார்.
லண்டனில் கடந்தவெள்ளிக்கிழமைகோலகலாமாக துவங்கியது. இந்த போட்டியில் தற்போது பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பல நாடுகள்பதக்க வேட்டையை துவக்கியுள்ள நிலையில் இந்திய அணி மட்டும் பதக்கம் பெறாமல் இருந்தது.இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட பல வீரர்கள் தோல்வியை தழுவினர். பேட்மின்டனில் ஜூவாலா கட்டாதோல்வியடைந்தார்.டேபிள் டென்னிசில் இந்திய அணி தோல்விடைந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று செய்னா நேவல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று வில்வித்தையில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பொம்பல்யா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதால், இந்த முறையும்வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபினவ் பிந்தரா, இறுதிப்போட்டிக்குதகுதி பெற முடியாமல் வெறியேறினார்.
இன்று , இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை போக்கினார்.அவர்,துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள்பிரிவு தகுதிச்சுற்றில்598 புள்ளிகள் பெற்று 3வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் அவர் 103.1 புள்ளிகள் பெண்ணு மொத்தம் 701.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம்லண்டன் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார்.
ககன் சாதனைக்கு அவரது தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார்.ககன் , இந்திய கொடியை ஒலிம்பிக் கிராமத்தில் பறக்க விட்டுள்ளார் என பெருமையுடன் கூறினார்.
இன்றுதுகப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற ககன் நரங் மூன்றாவது வீரர் ஆனார். முன்னாக கடந்த 2004ம் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2008ம் ஆண்டு 10.மீ.,ஏர் ரைபிள் பிரிவில் அபினவ்பிந்தரா தங்கப்பதக்கம் வென்றார்.
இன்றைய போட்டியில் ருமேனியாவின் ஆலின் ஜார்ஜ் மோல்டோவியாயு தங்கப்பதக்கத்தையும், இத்தாலியின் நிக்கோலோ கேம்ப்ரியானி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெண்கலப்பதக்கம் வென்ற ககன் நரங்,அரியானா மாநில அரசு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ககன் நரங் பதக்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், இன்னும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் அவர், அபினவ் பிந்தரா பதக்கம் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறினார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ககன் நரங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ககன் நரங்
தினமலர் – தி, 30 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- துப்பாக்கி சுடுதல்: ககன் நரங் …
- ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 12 …
- வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கல …
- இந்தியாவுக்கு 5 பதக்கம்
- நீச்சல்: சந்தீப் செஜ்வால் தங்க …
- இந்திய ஒலிம்பிக் சங்க தடை நீக்கமா: …
- வில்வித்தை: தீபிகா குமாரி வெள்ளி
- ஆசிய கூடைப்பந்து: இந்திய பெண்கள் …
- பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் …
- இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி : …
- ஊக்கம் தந்த கெய்ல், டிவிலியர்ஸ் …
- டேபிள் டென்னிஸ்: முக்கிய சுற்றில் இந்தியப் …
- இந்திய பயிற்சியாளருக்கு விசா மறு …
- திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கோயில் தேர் விழுந்து ஒருவர் பலி
தினமலர் - 45 நிமிடங்கள் முன்சென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டம்
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு
தினமலர் - 2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்
தினமலர் - 2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

