புதுடில்லி: புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு இன்று ஆறுதல் வெற்றி கிடைத்தது. பாகிஸ்தான் ஜெயிக்கும் என்ற கோணத்தில் போய்க்கொண்டிருந்த போது கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 140 க்கு மேல் ரன் எடுத்த போது இந்திய வீரர்கள் , பாக்., விக்கெட்டை சரித்து பாகிஸ்தானை தோல்விக்கு தள்ளினர்.
முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியினரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி 43 .4ஓவர்களில் அனைத்துவிக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டுவென்டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் 1-1 என சம நிலையில் முடிந்தது. சென்னை மற்றும் கோல்கட்டாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து பாகிஸ்தான்அணியினருக்கு அந்நாட்டு அதிபர் சர்தாரி பரிசு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில்டில்லியில் நடக்கும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.இந்த போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் அணி முனைப்பு காட்டியது.
இன்று டில்லியில் நடக்கும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோனி ,முதுகுவலி காரணமாக பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது.ஆனால், இன்றைய போட்டியில் தோனி பங்கேற்றார்.இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியிலிருந்து சேவக், திண்டா நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ரஹானே, ஷமி அகமது ஆகியோர்இடம்பெற்றனர்.
தொடர்ந்து இந்திய அணி துவக்க வீரர்களாககாம்பீரும், ரஹானேயும் களமிறங்கினர். சேவக் பதில் களமிறங்கிய ரஹானே, நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 11 பந்துகளைசந்தித்த ரஹானே 4 ரன்னில் முகமது இர்பான் பந்தில்அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லியும், 17 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஜூனாயத் கான் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் காம்பீர் முகமது இர்பான் பந்தில் 15 ரன்னில் அவுட்டானார்.சிறிது நேரம் விளையாடிய யுவராஜ் சிங்கும் 23 பந்தில் 23 ரன்களில் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா, 60 பந்துகளில் 31 ரன்கள் மட்டும் எடுத்து எல்.பி.டபிள்யூ முறையில்அவுட்டானார். அடுத்த வந்தஅஸ்வினும்ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கேப்டன் தோனி, இந்த முறை 55 பந்துகளில் 36 ரன்னிலும், புவனேஸ்வர் குமார்2 ரன்களிலும் அவுட்டானார்கள்.இறுதியில் இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கேப்டன் தோனி, இந்த முறை 55 பந்துகளில் 36 ரன்னிலும், புவனேஸ்வர் குமார்2 ரன்களிலும் அவுட்டானார்கள்.இறுதியில் இந்திய அணி43.4 ஓவரிகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இசாந்த்சர்மாவுக்கு 3 விக்கெட்:
பாகிஸ்தான் வீரர்கள் நசீர்ஜாம்ஜெட் ( 34) , கம்ரான்அக்மல் ( 0) , யூனீஸ்கான் ( 6 ) , மிசாப்அல்ஹக், ( 39) உமர்அக்மல் ( 25) , சோயப்மாலிக் ( 5 ) , முகம்மது ஹபீஸ் ( 2 ) ,ரன்கள் உமர்குல் ( 28 ) எடுத்தனர். பாகிஸ்தான் 48. 5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் இசாந்த்சர்மா 3விக்கெட்டுகளையும், அஸ்வின், புவனேஸ்வர் குமார்,ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சமி அகம்மது , ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கடைசி நேர பரபரப்பு பாகிஸ்தான் தோல்வி ; இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது !
தினமலர் – ஞா, 6 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு
தினமலர் - 53 நிமிடங்கள் முன்ஒரேநாளில் ரூ.1.95 லட்சத்துக்கு துணி வாங்கிய ஸ்ரீசாந்த்: டில்லி போலீஸ்
தினமலர் - 55 நிமிடங்கள் முன்தேர்தல் நிலைப்பாடு குறித்து பா.ஜ., ஆலோசனை
தினமலர் - 1 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்வீடு திரும்பினார் டி.எம்.எஸ்!
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

