கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க துவக்கம்

அரியலூர்: அரியலூர் எஸ்.ஆர்.எம்., கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க துவக்கவிழா நடந்தது.
அரியலூர் குரும்பஞ்சாவடியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வியியல் கல்லூரியில் நடந்த செஞ்சுருள் சங்க துவக்க விழாவுக்கு, தாளாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் மணிவண்ணன் வரவேற்றார்.
செஞ்சிலுவை சங்கத்தை துவக்கி வைத்த, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் செல்வராஜ், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசினார்.
எஸ்.ஆர்.எம்., கல்வியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் சுதா, இந்திராணி, கலைச்செல்வி, தேன்மொழி, புலிகேசி, அலுவலர்கள் ரவிச்சந்திரன், அருள்ஜோதி, பத்மாவதி, லட்சுமி மற்றும் மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.