தேடல்

தீக்குளிக்க முயன்றவர் கைது

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்., மங்கலம் அருகேயுள்ள ஓடைக்காலை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்,35. இவர் திருச்சி இறையியல் கல்லூரியில் கிறிஸ்தவ பாதிரியாருக்கான படிப்பு படித்து வந்தார். படிப்பு முடிய இன்னும் 9 மாதங்களே உள்ளன.கடந்த 6 மாதங்களுக்கு முன், அக்கல்லூரியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மைக்கேல்ராஜ் உள்பட 8 பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இதை கண்டித்தும், மைக்கேல்ராஜ் படிப்பு தொடர சிவகங்கை, ராமநாதபுரம் மறை மாவட்ட ஆயர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது வீடு முன், உழைக்கும் மக்கள் இயக்க மாநில தலைவி சந்தனமேரி தீக்குளிக்க முடிவெடுத்தார்.நேற்று காலை 11 மணிக்கு மேலூர் ரோட்டில் உள்ள ஆயர் இல்லத்திற்கு அருகே கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து கைது செய்தனர்.