தேடல்

கூடுதல் விலைக்கு சரக்கு விற்றவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம், நம்பியூர், தியேட்டர் ரோடு பெருமாளின் மகன் சுந்தர்ராஜி (30). டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி வந்து, ஓம்சக்தி கோவில் அருகே வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, சரக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சுந்தர்ரானை கைது செய்து, அவரிடம் இருந்து, பிராந்தி பாட்டிகளை பறிமுதல் செய்தார்.