தேடல்

கிணற்றுக்குள் தவறி விழுந்த 17வயது சிறுவன்

ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியில் ரோஷன் என்ற 17 வயது சிறுவன் ஒருவன் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவணை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பேரிடர் மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மழை பெய்து வருவதால்மீட்பு பணியில்சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் மாலை 3.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. அரியானாவில் 70 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் மகி என்ற சிறுமி தவறி விழுந்து மரணமடைந்த சோகம் நடந்த 24 மணி நேரத்துக்குள் சிறுவன்கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.