கேரள நடிகைக்கு த்ரிஷா எச்சரிக்கை!

என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பினால் கேரளாவுக்கு ஓட வேண்டியிருக்கும், என்று கேரள நடிகைக்கு த்ரிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். வாமணன் படத்தை இயக்கிய அஹமது, அடுத்து ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் ஏனோ சில காரணங்களால் அதிலிருந்து த்ரிஷா பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் த்ரிஷா, இனி தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் தெலுங்கிலேயே செட்டில் ஆக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான த்ரிஷா, நான் அஹமது படத்தை விட்டு வெளியேறப் போவதாக யாரிடமும் ஒருபோதும் சொன்னதில்லை. இவற்றை எல்லாம் எந்த நடிகை கிளப்பி விடுகிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இதே வேலையை பதிலுக்கு நான் செய்ய ஆரம்பித்தால் அவர் சொந்த ஊரான கேரளாவுக்கு ஓட வேண்டியிருக்கும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.