கோர்ட்டில் 2 பேர் ஆஜர்

கமுதி :புதுக்கோட்டை பஸ்ஸ்டாப் அருகே எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. கமுதி போலீசார் விசாரித்தபோது கொலைசெய்யப்பட்டவர் ஓ.கரிசல்குளத்தை சேர்ந்த முருகன், 35, என தெரியவந்தது.
கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., பாண்டியன் தலைமையில் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ஓ,கரிசல்குளத்தை சேர்ந்த குருசாமி மகன் முருகன், 25, மற்றும் சைவம் மகன் முருகன், 27, ஆகிய இருவரும் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.