கோல்கட்டாவில் சடலங்களுடன் இடதுசாரிகள் இன்று பேரணி

கோல்கட்டா : மேற்குவங்க மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ஆனால், இதனை மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறந்த கட்சி தலைவர்களின் உடலுடன் கோல்கட்டாவில் பேரணி நடத்துகிறது. சடலங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் பேரணி, மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.