தேடல்

கோழிப்பண்ணையில் வான்கோழி திருட்டு

கடலூர் : கடலூர் அடுத்த வழிசோதனைபாளையத்தைச் சேர்ந்தவர் துரைலிங்கம், 48. கேப்பர் மலைப்பகுதியில் இவருக்குச் சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு கோழிப்பண்ணையில் புகுந்து 40 கோழிகள் மற்றும் 4 வான்கோழி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மறுநாள் காலை பண்ணைக்கு வந்து பார்த்த துரைலிங்கம், கோழிகளைக் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்துதுரைலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.