கோவை : கோவையில் மர்மகாய்ச்சலுக்கு பெண் பலியாகியுள்ள நிலையில், மேலும் 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக வந்த பீதியையடுத்து அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த போர்த்தியாடா பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (24). மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின், சில நாட்களுக்கு முன் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நோய் தொற்று இருந்ததையடுத்து, அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சோதனையின் இறுதியில் தான் அது பன்றிக்காய்ச்சலா அல்லது இல்லையா என்பது தெரியவரும், கடந்தாண்டில் மட்டும், கோவையில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கி 2 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்த்தியாடா கிராம மக்களுக்கு, டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் மர்மகாய்ச்சலுக்கு பெண் பலி
தினமலர் – வி, 19 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சி.பி.ஐ., மீது ஜெகன் மனைவி பாய்ச்சல்
தினமலர் - 44 நிமிடங்கள் முன்அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
தினமலர் - 44 நிமிடங்கள் முன்நம்பியாராக ஸ்ரீகாந்த்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை
தினமலர் - 47 நிமிடங்கள் முன்விரைவில்...இட்டராமையிலதோ
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
