சங்கரன்கோவிலுக்கு குடும்பத்தோடு பிரசாரத்திற்கு வருகிறார் விஜயகாந்த்..!

சங்கரன்கோவில் :சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தலைவர்களின் பிரசார தேதி நெருங்க நெருங்கதேர்தல் களமும் சூடு பிடிக்கிறது. மண்ணின் மைந்தரான ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோநேற்று சங்கரன்கோவிலில் முதன்முதலாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார்.வரும் மார்ச் 13ல் முதல்வர் ஜெயலலிதாவும், மார்ச் 15ல் தி.மு.க.,தலைவர் கருணாநிதியும்,இடையே மார்ச் 12ம்தேதி துவங்கி மூன்று நாட்களுக்கு தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினும் பங்கேற்கின்றனர்.இதற்கிடையே தே.மு.தி.க.,வினரும் களத்தில் இறங்கியுள்ளனர். கட்சிக்கு தேர்தல் அலுவலகம், பிரசாரத்திற்குவரும் விஜயகாந்த் மனைவி, மைத்துனர் என குடும்பத்தோடு தங்குவதற்கு வீடு போன்றவற்றை கட்சியினர் தயார் செய்துவருகின்றனர். மார்ச் துவக்கத்தில் வரும் விஜயகாந்த், இங்கேயே தங்கி பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாகதெரிகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க.,வின் மாவட்ட செயலாளர்கள் 58 பேரும் சங்கரன்கோவிலுக்குவர <உள்ளனர். 4 பூத்களுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் தேர்தல் பணியாற்றவும் உள்ளனர்.