சைக்கிளுடன் காற்றடிக்கும் பம்ப்

மூணாறு :மூணாறில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிளுடன் காற்றடிக்கும் பம்ப் வழங்கப்பட்டது.
கேரளா அரசின் நூறு நாட்கள் வளர்ச்சி திட்டத்தில், ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு அரசு இலவசமாக சைக்கிளுடன் காற்றடிக்கும் பம்பும் வழங்கி வருகிறது.மூணாறில் சிறு மலர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிகள் 105 பேருக்கு சைக்கிள்களும்,பம்ப்பும் வழங்கப்பட்டன.
இதற்கான விழாவில் தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கருப்பசாமி,தலைமை ஆசிரியை சிஸ்டர் ரோஸ்லி சேவியர்,பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் ராமதாஸ் பங்கேற்றனர்.