செங்கல் சூளை மீது சுமோ மோதல்: 2 பேர் பலி

திருத்தணி: திருத்தணி அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்ற சுமோ கார் செங்கல் சூளையில் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாயினர். 12 பேர் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கோண சமுத்திரத்தைச்சேர்ந்த சாரதி, தனது மகள்‌ ஹோமதி யின் வளைகாப்பிற்காக தனது உறவினர்களுடன் மூன்று சுமோவில் சென்றனர். இதில் சாரதி சென்ற ‌சுமோ, குமாராஜகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செங்கல்சூளையில்மோதிய கவிழந்தது. இதில் இரு பெண்கள் பலியாயினர். 12 ‌காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சுமோவை ஓட்டிவந்த டிரைவர் பிரகாஷ் தப்பியோடி விட்டார்.