சிதம்பரம் ராஜினாமா : சுவாமி கோரிக்கை

புதுடில்லி : டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற யோகா குரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராம்லீலா விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பில், டில்லி போலீசார் அத்துமீறியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான் முழு பொறுப்பு என்றும், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.