தேசிய கருத்தரங்கு!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் எஸ்.எம்.கே.போம்ரா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி கோட்டா ஸ்ரீநிவாஸ் கருத்தரங்க மலரை வெளியிட்டார்.கருத்தரங்கில் டீன் திருமலை, கல்லூரி முதல்வர் எடிசன் சந்திரசீலன், துறைத் தலைவர் பி.முத்துசெந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய விஞ்ஞானி கோட்டா ஸ்ரீநிவாஸ்:மாணவர்களின் ஆய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்குகிறோம். இப்போது உயிரி மருத்துவப் பொறியியல் துறை மாணவர்கள் நவீன உபகரணங்களை உருவாக்குவதில் அதிக அக்கறையுடன் செயல்படுகின்றனர் என்றார்.