தேடல்

சொத்துக்கணக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இறுதி கெடு

புதுடில்லி: ஐ.பி.எஸ்.அதிகாரிகள் வரும் 15-ம் தேதிக்குள் தங்களது சொத்துவிவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது அசையும்,அசையா ‌சொத்து குறித்த விவரங்களை ஓவ்வொரு ஆண்டும்ஜனவரி மாதம் ‌தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.இதில் 3,325 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 550 பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்தனர். எஞ்சியவர்களுக்கு இரு முறை கெடுவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,வரும் 15-ம் தேதிக்குள்ஐ.பி.எஸ்.அதிகாரிகள் அனைவரும்தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் .இல்லையெனில் அவர்கள் தங்களது பதவிஉயர்வு உள்ளிட்ட இதர பயன்களை இழக்க நேரிடும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.