தேடல்

ஜப்பானில் பலத்த மழை :பலி எண்ணிக்கை உயர்வு

டோக்கியோ:ஜப்பானில் மீண்டும் பலத்த மழை பெய்துள்ளதால், பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.ஜப்பானில் கியூஷூ தீவில், கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குமாமோட்டோ மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழையின் வேகம் குறைந்திருந்ததால் மீட்புப் பணிகள் துவக்கப்பட்டன.

ஆனால், நேற்று மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால், ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.கியூஷூ தீவில் மட்டும் நான்கு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் உள்ள முதியவர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள எரிமலையின் அடிவாரத்தில் உள்ள அசோ என்ற இடத்தில், 81.7 செ.மீ., அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது.இதுவரை 32 பேர், பலத்த மழைக்கு பலியாகியுள்ளனர்.