தேடல்

ஜெகன் ஜாமின் மனு நிராகரிப்பு

ஐதராபாத் : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இவ்வழக்கில், மே 27ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகன், தற்போது சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 27ம் தேதி, ஜெகன், ஜாமின் வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில், ஜெகன் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சார்பில் வாதிடுகிறார். இவரது ஜாமின் மனு இன்று ஆந்திர ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சமுத்ரலா கோவிந்தராஜூலு, ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.