டில்லி அணிக்கு துணைக் கேப்டன் ஜெயவர்தனா

புதுடில்லி: டில்லி டேர்டெவில்ஸ் அணியின் துணைக் கேப்டனாக ஜெயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல்., டுவென்டி-20 தொடர் வரும் ஏப்., 4ம் தேதி துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன. டில்லி டேர் டெவில்ஸ் அணியின் துணைக்கேப்டனாக, இலங்கையின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டில்லி அணியின் கேப்டன் சேவக் வரவேற்றுள்ளார்.
அனுபவம் அதிகம்:
இலங்கை அணிக்கு 11 டுவென்டி-20, 102 ஒருநாள் போட்டி மற்றும் 28 டெஸ்ட் போட்டிக்கு தலைமை வகித்துள்ளார் ஜெயவர்தனா. இதில் 8 டுவென்டி-20, 59 ஒருநாள் போட்டி, 15 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றது. இவர், கடந்த ஐ.பி.எல்., தொடரில் கொச்சி அணியின் கேப்டனாக செயல்பட்டார். இம்முறை கொச்சி அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து நீக்கப்பட்டதால், சமீபத்திய ஏலத்தில் டில்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.