தேடல்

நயன்தாராவுடன் பிரிவு ஏன்? மனம் திறந்தார் பிரபுதேவா!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர் பிரபுதேவா. நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலால், தனது முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டதுடன், சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி இருந்தார் நயன்தாரா. இருவரும் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேற திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இவர்கள் பிரிவிற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின. இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை பக்கம், பக்கமாக கொட்டித்தீர்த்தனர்.

இந்த நிலையில் முதன்முறையாக நயன்தாராவுடன் பிரிவுக்கு காரணம் குறித்து பிரபுதேவா மனம் திறந்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளதாவது, எனது குழந்தைகளின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன் என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம், ரமலத்துடன் விவாகரத்தான பிறகும், அவரது பிள்ளைகளுடன் பிரபுதேவா அதிக நேரம் செலவழித்தது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. இதுவே இவர்களது பிரிவுக்கு காரணம் என்பது உண்மையாகியுள்ளது.