தேடல்

பட்டினத்தார் கோவிலில் 1.5 கோடி ரூபாயில் ராஜகோபுரம்

சென்னை : இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில், 1.5 கோடி ரூபாய் செலவில் கருவறை, ராஜகோபுரம், தியான மண்டபம் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது. திருவொற்றியூரில் கடற்கரை அருகில்பட்டினத்தாரின் சமாதிக் கோவில் உள்ளது. பிற்காலத்தில் அவரது சமாதி மீதுகோவில் எழுப்பப்பட்டது. இங்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருக்கும் பட்டினத்தார் கோவிலின் கருவறை40 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படுகிறது.இது தவிர, உபயதாரர் மூலம், கோவில் வளாகத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில், 12 கால் தியான மண்டபம், ராஜகோபுரம் கட்டுமானப் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.