தேடல்

பன்றி பந்தயம்: 42 பேர் கைது

நகரி : ஆந்திராவில், பன்றி பந்தயத்தில் ஈடுபட்ட, 42 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, பன்றிகள் உட்பட ஒரு லட்ச ரூபாய் பணம், 11 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குதிரைப் பந்தயம், கோழிப் பந்தயம் நடப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆந்திராவில் தற்போது, பன்றிகளைச் சண்டைக்கு விட்டு, பந்தயம் கட்டும் வினோத சம்பவம் நடந்து வருகிறது.இந்த பந்தயம், ஆந்திராவில், கடப்பா மாவட்டம், மைதுகூடு அடுத்த, மிட்டமானுபள்ளி ஏரிக்குள் நடந்தது. தகவலறிந்த மைதுகூடு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்ததில், பன்றி பந்தயம் நடத்தப்படுவதும், பன்றிகளின் மீது பணம் கட்டுவதும் தெரிய வந்தது.இது தொடர்பாக, வெங்கடய்யா, பீட்டானியை சேர்ந்த சுப்பநாயுடு உட்பட, 42 பேரை, போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய் பணம், 11 அலைபேசிகள், இரண்டு பந்தய பன்றிகளை பறிமுதல் செய்தனர். கைதான அனைவரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.