ராஜபாளையம்:
தேசிய வேளாண் காப்பீட்டு திட்ட விளக்க முகாம், ராஜபாளையம் வட்டாரத்தில்
நடைபெற்று வருகிறது. இதில், பயிர் காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குனர்
உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்து உள்ளார். நெல் கோடை ஒரு ஏக்கருக்கான
பிரிமியம் 126 ரூபாய், கடைசி நாள் மார்ச் 15. உளுந்து, ஏக்கருக்கு
பிரிமியம் 34 ரூபாய், கடைசி நாள் பிப்., 15. கரும்பு, ஏக்கருக்கு ஆயிரத்து
54 ரூபாய், கடைசி நாள் ஜூன் 15. மேலும் விபரங்களுக்கு, ராஜபாளையம் வேளாண்
அலுவலகத்தை அனுகலாம்.
