சென்னை : சென்னையில் பள்ளிகள் பங்கேற்கும், மாநில தடகள போட்டி நடக்க இருக்கிறது.
சென்னை
மயிலாப்பூர் கிளப் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் சர்வதேச
அளவிலான, மாநில தடகள போட்டி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல்
கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டி, வரும் 25ம் துவங்குகிறது. இதில்
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், 100 மீ., 200 மீ., 400
மீ., 4*100 மீ., என, சீனியர், ஜூனியர், சப் - ஜூனியர் ஆகிய பிரிவுகளில்
போட்டி நடக்கிறது.
