துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் விஜய் குமார்

தோகா: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், 25 மீ., ஸ்டாண்டர்டு பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார் தங்கம் வென்றார்.
கத்தார் தலைநகர் தோகாவில், 12வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீ., ஸ்டாண்டர்டு பிஸ்டல் தனிநபர் பிரிவில், 572 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் விஜய் குமார் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஜின் யோங்டே (572), ஜப்பானின் டோமோஹிரோ கிடா (568) அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர். இப்போட்டியில் விளையாடிய மற்ற இந்திய வீரர்களான சமரேஷ் ஜங் (552) 16வது, மகாவீர் சிங் (542) 24வது இடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான 25 மீ., ஸ்டாண்டர்டு பிஸ்டல் அணிகள் பிரிவில், 1666 புள்ளிகள் பெற்ற இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. இப்போட்டியில் சீனா (1695), தாய்லாந்து (1683), ஜப்பான் (1680) முதல் மூன்று இடங்களை பிடித்தன.