தேடல்

போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் மக்கள்

உடுமலை:உடுமலை ராஜேந்திரா சாலை ரோட்டில், போக்குவரத்து அதிகமுள்ள தினசரி காய்கறி சந்தை ரோட்டோரத்தையொட்டி, மீன், மட்டன் மற்றும் சிக்கன் கடைகள் öŒயல்படுகின்றன. இதனால், காய்கறி மற்றும் இறைச்சி வாங்க வரும் மக்கள் தங்கள் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், இறைச்சி வாங்க வரும் மக்கள் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும்,
இறைச்சிகள் திறந்த வெளியில் விற்பனை செய்யப்படுவதுடன், இறைச்சி கழிவுகள் சாக்கடை மற்றும் திறந்த வெளியில் வீசப்படுவதால், சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.