பாகிஸ்தானில் சிவராத்திரி விழா

லாகூர்: பாகிஸ்தானில், பஞ்சாப் மற்றும் லாகூர் உள்ளிட்ட இடங்களில், இந்து மற்றும் பஞ்சாபியர்களின் கோவில்கள் உள்ளன. சக்வால் மாவட்டத்தில் புகழ் பெற்ற கட்டாஸ் ராஜ் சிவன் கோவில் உள்ளது. சிவராத்திரியையொட்டி ஏராளமான இந்துக்கள், நேற்று இந்த கோவிலில் வழிபாடு நடத்தினர். இந்தியாவிலிருந்து புனித யாத்திரை வந்தவர்களும், கட்டாஸ் ராஜ் கோவிலில் தரிசனம் செய்தனர். இன்னும் சில கோவில்களில் தீபமேற்றி வழிபட்டனர். இந்திய யாத்திரிகர்கள், ஆறாண்டுக்கு பிறகு, இந்த கோவிலில் நேற்று தரிசனம் செய்து புனித நீராடினர். இவர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு, போக்குவரத்துக்கு குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. லாகூரில், புகழ் பெற்ற கிருஷ்ணர் கோவிலும் உள்ளது. இந்திய யாத்திரிகர்கள், இங்கு சென்றும் வழிபட்டனர்.