தேடல்

பிங்கிக்கு புது சோதனை: கோர்ட் உத்தரவு

கோல்கட்டா:ஆணா..பெண்ணா என்ற பாலின சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமனிக்கிற்கு குரோமசோம் சோதனை நடத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது.மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பிங்கி பிரமானிக். ஆசிய விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தினார். பிங்கி உண்மையில் ஒரு ஆண் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிங்கிக்கு தனியார் மருத்துவமனையில் பாலின சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர் ஒரு ஆண் என்பது தெரிய வந்தது. பின் அரசு மருத்துவமனையில் இவருக்கு பல்வேறு சோதனை நடத்தப்பட்டன. ஆனால் குரோமசோம் சோதனை செய்யும் வசதி இல்லை என்று அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து குரோமசோம் சோதனைக்காக பிங்கியின் ரத்த மாதிரியை ஐதராபாத் அல்லது மும்பைக்கு அனுப்புமாறு பாராசட் தலைமை மாஜிஸ்திரேட் அனிதா மாத்தூர் உத்தரவிட்டார். பிங்கியின் ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டு, நீதிமன்ற காவல் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.