தேடல்

பெரம்பலூர் எஸ்.பி., பொறுப்பேற்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.,யாக ராஜசேகரன் நேற்று பொறுப்பேற்றார்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த ரூபேஸ்குமார்மீனா, திருவள்ளூர் மாவட்டத்துக்கு கடந்த ஏப்., 16ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்னர் கடந்த மூன்று மாதங்களாக இப்பணியிடம் காலியாக இருந்தது. திருச்சி மாவட்ட எஸ்.பி., லலிதாலட்சுமி, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் முதல்வர் உத்தரவிட்டதன்பேரில் சென்னை கியூ பிரிவில் ஏ.டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த ராஜசேகரன் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் திருச்சி மண்டல ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகன், டி.ஐ.ஜி., அமல்ராஜ் ஆகியோரை பெரம்பலூர் எஸ்.பி., ராஜசேகரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.