தேடல்

தி.மு.க., போராட்டம்: 2500 பேர் கைது

மதுரை : தி.மு.க.வினர் நடத்தி வரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் வாடிப்பட்டியில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தமிழரசி, கட்சி பிரமுகர் மூர்த்தி உள்ளிட்ட 1000 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மேலூரில் 476பேரும், உசிலம்பட்டியில் 346பேரும், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 284 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.