மானாட மயிலாடவில் குஷ்பு, நமீதா!

கலைஞர் தொலைக்காட்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி மானாட மயிலாட. நடன இயக்குனர் கலா இயக்கத்தில் உருவாகி, ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் புதிய அத்தியாயம் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. மீண்டும் புதுப்பொலிவோடு வலம் வரத்தொடங்கியிருக்கும் இந்த `மானாட... மயிலாட... நடன போட்டியில் இடம் பெற்றுள்ள நடன பெண்மணிகள் அனைவருமே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் தடம் பதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சந்துரு-அஸ்வதி, சூர்யா-அங்கிதா, பாபி-சுவர்ணா, விஸ்வாக்-ஆனந்தி, அரவிந்த்-சுவாதி மற்றும் புவியரசு-அனுஷா ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த அணிகள் மோதும் நடன போட்டியின் நடுவர்களாக நடிககள் குஷ்புவும், நமீதாவும் இருக்கிறார்கள்.