முதியோர் உதவித்தொகை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள எழிலூர் கிராமத்தில் தாசில்தார் ஜெயக்கொடி தலைமையில் மனுநீதிநாள் முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
இம்முகாமுக்கு திருத்துறைப்பூண்டி யூனியன் தலைவர் வேதநாயகி முன்னிலை வகித்தார். பஞ்., தலைவர்கள் எழிலூர் ரவிச்சந்திரன், மருதவனம் வெங்கடாசலம், மாங்குடி ஞானசேகரன் மற்றும் யூனியன் ஆணையர் ராஜேந்திரன், பஞ்.,தலைவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமில், முதியோர் உதவித்தொகை ஒன்பது பேருக்கும், பட்டா மாறுதல் உத்தரவு ஒருவருக்கும் வழங்கப்பட்டது. மொத்தம் 64 மனுக்கள் பெறப்பட்டு 17 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.