தேடல்

முதல் ஒருநாள் போட்டி: இலங்கை-9/1

ஹம்பந்தோட்டா :முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 315 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா இலங்‌கை அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஹம்பந்தோட்டாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிமுதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.துவக்க வீரராக களமிறங்கிய காம்பீர் 3 ரன்னில் வெளியேறினார். சேவக் அதிரடியாக விளையாடி 96 ரன்களில் அவுட்டாகி, 4 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். சிறப்பாக விளையாடிய விராத் கோக்லி, 106 ரன்கள் எடுத்தார்.ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாக, பின் வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார்.கேப்டன் தோனியும் தன் பங்குக்கு 35 ரன்கள் எடுத்தார்.இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி வெற்றி பெற 315 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் களமிறங்கியுள்ள இலங்கை அணி 1.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.