தேடல்

மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் வேலை உறுதி திட்ட பணிகள் சோதனை

தேனி: மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் வேலை உறுதி திட்ட பணிகள் சோதனையிடப்பட்டன.

மாவட்டத்தில் 110 கிராமங்களில் வேலை உறுதி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சம்பளம் 119 ரூபாயில் இருந்து 132 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பயனாளிகள் செய்த வேலையை அளவீடு செய்து வழங்குவதால் சராசரியாக 94 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.

திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து முதன் முறையாக, ஒரே நாளில் மட்டும் அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பணிகளை சோதனை செய்தனர்.

பயனாளிகளின் வேலை திறன், பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் மட்டுமே வேலை செய்கின்றனரா?, முறைகேடு எதுவும் நடக்கிறதா, வேலை அளவீடு செய்யப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறதா,போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.