தாய்லாந்து அகதிகள் முகாமில் பெரும்தீவிபத்து

பாங்காங் : தாய்லாந்தின் உம்பெய்ம் மாய் பகுதியில் உள்ள மியான்மர் அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உணவு மற்றும் உறைவிடங்களை வழங்கும் பணியில் தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.