தேடல்

ரயில்வே பொருட்கள் திருடியவர்கள் கைது

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர்கள் முத்தையா,30, முனியாண்டி,32, தங்கபாண்டியன்,30 ரயில்வே பொருட்களை திருடி வைத்திருந்தனர். இவர்களை கைது செய்த ரயில்வே போலீசார் திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் லதா, திருடியவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.