ராக்கெட் வீச்சு: சிரியாவில் 2 நிருபர்கள் பலி

லண்டன்: சிரியாவில் இரு வெளிநாட்டு நிருபர்கள் அங்கு நடந்த சண்டையின் போது ராக்கெட் வீ்ச்சில் கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷீத் ஆசாத்திற்கு எதிராக கடந்த 11 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐ.நா. மற்றும் அரபு லீக் நாடுகள் வலியுறுத்தியும் சிரியா பிரச்னை முடிவுக்கு கொண்டுவரமுடியவில்லை. சிரியாவின் முக்கிய நகரமான ஹோம்‌ஸ் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களை செய்தி சேகரிக்க சென்ற மேரிகொல்வின் என்ற நிருபரும், ரெமிஓச்செலி்க் என்ற புகைப்பட நிருபரும் நேற்று ஹோம்ஸ்நகரின் வீட்டில் தங்கியிருந்த போது ராக்கெட் வீச்சில் பலியானதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

பலியான மேரிகொல்வின், சன்டே டைம்ஸ் நிருபவர் எனவும், ரெமி ஒச்செலிக் பிரான்ஸ் நாட்டு புகைப்பட நிருபர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிலும் நிருபர் கொலை: இதே போன்று ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய கூட்டம் ஒன்றினை செய்தி சேகரிக்க சென்ற வானொலி நிருபர் ஷாகித்கான் பஹதர்ஜி, 25 என்பவர் த‌லை துண்டித்து கொல்லப்பட்டார். ஆனால் இதனை தலிபான்கள் மறுத்துள்ளனர்.

இதற்கிடையே நியூயார்க்கை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு என்ற அமைப்பு, கடந்த 2011-ம் ஆண்டில் சர்வதேச அளவில் பல்வேறு சம்பவங்களால் 49-க்கும் அதிகமான ‌பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர் என ஆய்வில் தெரிவித்துள்ளது.