தேடல்

ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை வெளியீடு: சென்செக்ஸ் 90புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை : இந்திய பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதை தடுக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கொள்கையில் குறிப்பாக வெளிநாட்டுக்கான வர்த்தக கடன் விகிதத்தை 10 பில்லியன் டாலராக உயர்த்தியதால், வாரத்தின் முதல்நாளில் 17 ஆயிரம் புள்ளிகள் ஏற்றுத்துடன் காணப்பட்ட இந்திய பங்குசந்தை மாலையில் 90 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. மாலை வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 90.35 புள்ளிகள் சரிந்து 16,882.16-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.40 புள்ளிகள் சரிந்து 5,114.65-ஆகவும் காணப்பட்டது.