தேடல்

திருட்டு மணல் லாரிகள் பறிமுதல் கமுதி ஏ.எஸ்.பி., நடவடிக்கை

கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளத்தில் திருட்டு மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவிலாங்குளத்தில் தனியார் சிலர் பட்டா நிலத்தில் சவடு மணல் குவாரி பெயரில் அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், சவடு மணல் பெயரில், ஆற்று மணல் அள்ளுவதாக கமுதி ஏ.எஸ்.பி., அவினவ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அப்பகுதியில் ஏ.எஸ்.பி.,ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளி வந்த நான்கு லாரிகளை பறிமுதல் செய்து, கோவிலாங்குளம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

லாரி டிரைவர்கள் கருங்குளம் மாரிமுத்து, மேலபுதூர் ஜெயபால், ஆலரடிபட்டி மூக்கையா, காளபெருமாள்பட்டி மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.